Javascript DHTML Image Web Scroller Powered by dhtml-menu-builder.com
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
தூய அந்தோனியாரின் திருப்பண்டம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

பாதுவா நகரிலிருந்து தூய அந்தோனியாரின் திருப்பண்டம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. கொழும்புப் பேராயர் அதி வந்தனைக்குரிய மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களின் ஒழுங்கமைப்போடு பாதுவா நகரிலிருந்து தூய அந்தோனியாரின் திருப்பண்டம் (அருட்பொருட்கள்) இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாண்டு பங்குனித் திங்கள் 05ம் நாள் தொடக்கம் 18ம் நாள்வரையிலுள்ள காலப் பகுதியில் இலங்கையின் பல மறைமாவட்டங்களுக்கும் தூய அந்தோனியாரின் அருட்பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இலங்கை மக்கள் தூய அந்தோனியாரின் அருட்பொருட்களைப் பார்க்கும் அரிய பேற்றினை இதன் மூலம் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
இவ்வாண்டு 175ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோனியாரின் ஆலயத்திற்கு எடுத்துவரப்படுகின்றது.அதன் பின் கீழ்வரும் ஒழுங்கமைப்பில் இலங்கையின் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.

நிகழ்ச்சி நிரல்.
 

05.03.2010      பாதுவா நகரிலிருந்து எடுத்துவரப்படும் தூய அந்தோனியாரின் அருட்பொருட்கள் கொழும்பு     பண்டாரநாயக்க சர்வதேச விமான நியைத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோனியாரின்         ஆலயத்திற்கு எடுத்துவரப்படும்.
10.03.2010      காலி மறைமாவட்டப் பேராலயத்திற்கு.
11.03.2010      பண்டாரவளை தூய அந்தோனியார் ஆலயத்திற்கு.
12.03.2010      மட்டக்களப்பு  தூய அந்தோனியார் பேராலயத்திற்கு.
13.03.2010      அனுராதபுரம் பேராலயத்திற்கு
13.03.2010      மதவாச்சி ஆலயத்திற்கு.(இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு)
14.03.2010      யாழ்ப்பாணம்: மானிப்பாய்  தூய அந்தோனியார் ஆலயத்திற்கு.
15.03.2010      மன்னார் தள்ளாடி  தூய அந்தோனியார் ஆலயத்திற்கு.
16.03.2010      கொட்டப்பிட்டிய  தூய அந்தோனியார் ஆலயத்திற்கு.
16.03.2010      குருநாகல் : பள்ளந்தெனிய தூய அந்தோனியார் ஆலயத்திற்கு.
17.03.2010      கண்டி  தூய அந்தோனியார் பேராலயத்திற்கு.
17.03.2010      லயனகெமுல்ல  தூய அந்தோனியார் ஆலயத்திற்கு.
18.03.2010      மீண்டும் பாதுவா நகரிற்கு. 

26.01.2010 Views=110