சுவிற்சலாந்து நாட்டின் பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் உரோமை வத்திக்கான் திருப்பீடத்தின் கிறீஸ்தவ சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பினை முன்னெடுத்துச் செல்லும் திருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பேராயத்தின் தலைவராக இதுவரை பணியாற்றிய கர்தினால் வோல்ரர் கஸ்பர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் 1950ம் ஆண்டு சுவிற்சலாந்து நாட்டின் இம்மன்புறுக்கே என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தனது 32வது வயதில் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். பின்னர் 1995ம் ஆண்டில் பாசல் மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார். 2007 –2009 வரையான காலப்பகுதியில் சுவிஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றினார்.
ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்களின் பணி சிறக்க சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் செபமும், வாழ்த்துக்களும்.
|