இறைவனின் படைப்பைப் பாதுகாப்போம்.

"இயற்கையின் இயல்புத் தன்மையைச் சீர்குலைப்பது அல்லது சீரழிப்பது இன்று அறநெறியைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது அமைதிக்கும் , மனித வாழ்விற்கும் மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எம்மைச் சுற்றி நிகழ்பவை பற்றி நாம் அக்கறையற்றவர்களாகவோ அல்லது அலட்சியப் போக்கு உடையவர்களாகவோ இருந்துவிட முடியாது. இயற்கையின் அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியையேனும் சீர்கெடுப்பது எம் அனைவரையும் பாதிக்கின்றது". எனத் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் தனது உலக அமைதித் தினத்திற்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் "இயற்கையையும் சுற்றாடலையும் நாம் பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார். அத்தோடு மனித இனம் இன்று மிகப்பெரிய அல்லது ஆழ்ந்த ஒரு கலாச்சாரப் புதுப்பித்தலை வேண்டி நிற்கின்றது. உலகில் அமைதியைக் கட்டியெழுப்ப இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது பொறுப்பு வாய்ந்த ஒவ்வொருடையவும் கடமையாகவுள்ளது. இது இன்று மிகவும் அவசியமான ஒரு சவாலாக அமைந்துள்ளது. இதனை ஒவ்வொருவரும் ஒத்திசைந்த அர்ப்பணத்தோடும் , புதிய சிந்தனையோடும் எதிர்கொள்ளவேண்டும். இது எதிர்காலச் சமூகத்திற்கு வளமான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க எமக்கு கிடைக்கும் ஒரு தெய்வீக வரப்பிரசாதமாகவும் அமைகின்றது". எனவும் குறிப்பிட்டுள்ளார்.
|